Thursday, September 5, 2013

இந்த பூமி வேற்றுலக சக்திகளின் கொத்தடிமைக் கூடம் (Part-2)


இந்த பூமி வேற்றுலக சக்திகளின் கொத்தடிமைக் கூடம் (Part-2)

இந்த பூமி வேற்றுலக சக்திகளின் 
கொத்தடிமைக் கூடம் (Part-2)

இந்த உலகத்தையும் இந்த உலகில் உள்ள
உயிரினங்களையும் உலகம் தோன்றிய நாள்முதல்
ஆண்டு வருவது வேற்றுலக சக்திகளே

இந்த பிரபஞ்சத்தில் மனித இனத்தைபோல்
அறிவுள்ள, உயிரினங்கள் எங்கும் கிடையாது.

இங்குள்ளதைபோல் வளங்களும்,
வசதிகளும் எங்கும் கிடையாது.

எல்லாவகையிலும் படைப்பில்
ஒன்றாக இருக்கும் மனித இனம் உருவ அமைப்பில்,
மற்றும் நிறத்தில்தான் வேறுபாடு  கொண்டதாக உள்ளது.

பலவேறுபட்ட தட்ப வெட்ப நிலைகளும்,
கணக்கிலடங்கா தாவரங்களும்,உயிரினங்களும்,
 மொத்த  பரப்பில் 75 விழுக்காடுகள் நீர்பரப்பும்
அதில் கணக்கிலடங்கா வித விதமான உயிரினங்களும்.
உயிர் வாழ தேவையான பிராண வாயுவை அளிக்கும்
பசுமைக் காடுகளும் நிறைந்து விளங்கியது
முன்னொரு காலத்தில்.

இதிஹாச புராணங்களைபடித்தீர்களேயானால்
எல்லா இடங்களும் ஆரண்யம் அல்லது வனம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த உலகில் பஞ்ச பூத சக்திகள்
இந்த உலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில்
 வைத்திருந்தாலும்.
இந்த உலகின் பெரும்பாலான பகுதிகளை
அசுர சக்திகள் தங்கள் ஆதிக்கத்தில்  வைத்துக்கொண்டு
 மக்களை சிந்திக்க விடாமல் செய்து
தங்களின் அடிமைகளாகவே
காலம் பூராவும் வைத்து வந்துள்ளன
அந்த கொடுமை இன்றும் தொடர்கிறது.

அவ்வப்போது இந்த உலகிற்கு
நன்மைகளை செய்யும் தேவ சக்திகள்
இறைவனுடன் முறையிட்டு தெய்வங்களே
நேரில் பூமிக்கு வந்து அசுர சக்திகளை அழித்து
நீதியையும் தர்மத்தையும் தொடர்ந்து
நிலை நாட்டி வந்துள்ளன.

அந்த பணியை நிறைவேற்றுவதற்காக
அவைகளே மனித வடிவில் பல முறை
பிறவி எடுத்துள்ளன {உதாரணம்-ராமாவதாரம்,கிருஷ்ணாவதாரம் போன்றவை}




சில நேரங்களில் தேவ சக்திகள்
மனிதர்களின் உடலில் புகுந்து கொண்டு
அந்த வேலையை செய்திருக்கின்றன (உதாரணம்-மகாபாரதம்-பஞ்ச பாண்டவர்கள்-ராமாயணம் -புத்திர காமேஷ்டி யாக புருஷன்.  அளித்த கருப்பாயாசம்)

இந்த பிரபஞ்ச இயக்கத்தில்
நேர்மறை சக்திகளான தேவ சக்திகளும்(பொது நலம்),
எதிர்மறை சக்திகளான அசுர(சுயநலம்) சக்திகளும்
தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருக்கின்றன
இதற்க்கு முடிவே இல்லை. ஆனால் இவர்களுக்கு இடையே
நடைபெறும் போரில் பலிகடா ஆவது
இங்குள்ள லட்சக்கணக்கான் மனிதர்கள்தான்.




இந்த போர்களில் ஏவுகணைகளும், விமானங்களும், அணு மற்றும் ரசாயன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 கோடிக்கணக்கான மனிதர்கள் கூண்டோடு கைலாசம் போயுள்ளனர்.

ஒரு தீய சக்தி அழிந்தால்
 பல தீய சக்திகள் தோன்றுகின்றன.





இந்த உலக மனிதர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களை எந்த சக்தியாலும் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இந்த அசுர சக்திகள் அவர்களை சேரவும் விடாமல் சிந்திக்கவும் விடாமல் செய்து அவர்களை என்று தங்கள் கட்டுப்பாட்டில் அடிமைகளாக வைத்துக்கொண்டிருக்கின்ற எப்படி ?
(இன்னும் வரும்)

pic. courtesy google images.