Tuesday, December 11, 2012

அனகோண்டா பாம்பு


வால்மார்ட்



வால்மார்ட் நம் சுதந்திர இந்தியாவை தந்திரமாக
அனகோண்டா பாம்பு போல் விழுங்க
மேலை நாடுகள் தீட்டும் திட்டம்

வழக்கம்போல் இந்தியாவிர்க்கு
தங்கள் கட்சிதான் சுதந்திரம் பெற்று தந்தது
என்று தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும்
 நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
 ஊழலில் சிக்கி அடாவடி அரசியல் நடத்திகொண்டிருக்கும் ஒரு கட்சி அறிவித்த இந்த வால்மார்ட் பிரச்சினையை எதிரி கட்சிகளும்,உதிரி கட்சிகளும் எதிர்ப்பதுபோல் நாடகமாடி மக்களின் வரி பணத்தைவீணடித்துக்கொண்டிருக்கின்றன.

அன்று இந்தியாவை நம் நாட்டிற்கு
வியாபாரம் செய்ய வந்த
கிழக்கிந்திய கம்பனி மலைப்பாம்பு
ஒரு பெரிய மானை சிறிது சிறிதாக
விழுங்கியது போல்
சிறிது சிறிதாக நம் நாட்டை பிடித்து,
அரசை நிறுவி, மக்களிடையே
அவ்வப்போது கலவரங்களை தூண்டி
ஒன்றாய் வாழ்ந்த மக்களை ஜாதி,மதம்,
இன அடிப்படையில் பிரித்து
நம்மை அடிமைபடுத்தினர்.

பலகோடி பேர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து
பெற்ற சுதந்திரத்தை மொத்தமாக ஒரேஉத்திரவில்
தாரை வார்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இனி மக்கள் அவர்கள் கொடுக்கும்
பொருட்களைத்தான் வாங்கவேண்டிவரும்.
துவக்கத்தில் குறைந்த விலைக்கு விற்கப்படும்
பொருட்கள் நம் கண்ணுக்கு
தெரியாமல் விலை ஏறி கொண்டே போகும்
பெட்ரோல் போல் ,எரிவாயு போல், தங்கம் போல்

நம் நாட்டு தொழில்,கலாச்சாரங்கள்,
அடித்தள மக்கள் வாழ்வு
எல்லாம் அழியப்போகிறது.

இவர்களை யாரும் எதிர்க்கமுடியாது.
ஏனென்றால் அவர்களுக்கு
ஆளும் அரசுகளின் ஆதரவு இருக்கிறது.

அரசுகள் தேர்தலின் போது வழக்கம்போல்
 இலவசங்களை அறிவித்து
மக்களை விலைக்கு வாங்கிவிடும்
ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது.

வழக்கம்போல் உழைப்பவன்
உழைத்துக்கொண்டு
அவன் வயிற்ரை கழுவவேண்டும்
அவர்கள் நடைபாதையில் உறங்கவேண்டும்.
ஏனென்றால் வீட்டு வாடகைகள் பல ஆயிரங்களை தாண்டிவிட்டன.வீடுகளின் விலைகளோ
லட்சங்களிலிருந்து கோடிகளை எட்டிவிட்டன

இந்திய மக்களிடம் ஒற்றுமை கிடையாது.
அவர்கள் இடையே கணக்கிலடங்கா வேற்றுமைகள்
இனி அவர்களை ஒன்று திரட்டி போராடுவது மிக கடினம்

ஏனென்றால் பெரும்பகுதி மக்களுக்கு
தினசரி வாழ்க்கையை நடத்துவதே
பெரும்பாடாக இருக்கிறது.

இனி கடவுள் விட்ட வழி

வாழ்க ஜனநாயகம்.


Saturday, November 24, 2012

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

தங்கத்தின் மீது மோகம் கொண்டவர்களே 
தங்கம் வாங்கும் முன்பு 
இந்த உண்மையை 
தெரிந்துகொள்ளுங்கள்



. 


இது என்னுடைய சொந்த பதிவல்ல
எனக்கு வந்ததை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்.
நகை கடை அதிபர்கள் வழக்கம்போல் 
அவர்களின் வியாபார தந்திரங்களை 
காட்டி மக்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம். 

"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு

மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். 

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! 

இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள்

 நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? 

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? 

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? 

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? 

அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

 பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? 

ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? 

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. 

இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப் பட வேண்டும்.

நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்து



Tuesday, October 23, 2012

தமிழக மீனவர்களும் நாட்டு மக்களும்


தமிழக மீனவர்களும் 
நாட்டு மக்களும் 

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாட்டு
கடற்க்கரையோர மீனவர்கள்,அதுவும் குறிப்பாக
தென் பகுதி மீனவர்கள்
பெரும் துன்பத்திற்கு
உள்ளாகி வருகின்றனர்.

அதுவும் கட்ச தீவை இலங்கைக்கு
தாரை வார்த்த பின்பும், இலங்கையில்
உள்நாட்டுகலவரங்கள்,போர் முதலிய
சம்பவங்கள் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பிறகு
அவர்களின் துன்பங்கள் பன்மடங்கு பெருகிவிட்டது எனலாம்.

தினமும் இலங்கை கடற்ப்படையினரால்
ஏதாவதொரு தாக்குதல்
அவர்கள்மீது நடத்தப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள் மட்டும் அவர்களுக்காக
குரல் எழுப்புவதோடு மட்டும் சரி.

மற்றும் மாநில அரசோ மைய அரசோ
அவர்கள் பிரச்சினையை தீர்த்து
முற்றுபுள்ளி வைக்க
தீவிர முயற்சி செய்ய வில்லை.

இந்த பிரச்சினையை எடுத்தோம் கவிழ்த்தோம்
என்று விட்டுவிடவும் முடியாது .
கண்டுகொள்ளாமலும் இருக்க முடியாது

ஏனென்றால் உனக்கு எதிரி எனக்கு நண்பன்
என்ற கொள்கை அடிப்படையில் இலங்கை
நம்முடைய எதிரிகளான சீனாவுடனும் ,
பாகிஸ்தானுடனும் கொஞ்சி குலாவி அவர்களை
தன் நாட்டில் சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்து
இந்தியாவுடனும் நட்பு பாராட்டி வருகிறது.

மீனவர்கள் பிரச்சினையில் ஏன்
வட மாநில மக்களோ தமிழ் நாட்டு மக்களோ
ஆர்வம் காட்டவில்லை என்று
சிலர் நினைக்கக்கூடும்

அதற்க்கு காரணம் மீனவர்கள்
 வாழ்க்கை முறை அப்படி அமைந்துவிட்டது

அவர்கள் கடலில் பிடித்து கொண்டு வந்த மீனை
பொது மக்களுக்கு விற்று காசாக்குவதொடு
மக்கள் தொடர்பு முடிவடைந்துவிடுகிறது.

ஆண்கள் விடியுமுன்பே
கடலுக்கு சென்று விடுகிறார்கள்

பெண்கள் பகலில் மீன் விற்க
சென்றுவிடுகிறார்கள்.

அதனால் அவர்கள் வாழ்வு அவர்கள் செய்யும் தொழிலுண்டு
வேலை உண்டு என்று முடங்கிவிடுவதால்
பொதுமக்களோடு தொடர்பில்லாமல் போய்விட்டது.

இதனால்தான் மக்கள் அவர்கள் பிரச்சினை மீது
போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் உண்மை.

அவர்கள் வலிமை மிக்கவர்களாகவும்,
உயிருக்கு அஞ்சாத மனப்பான்மை
கொண்டவர்களாகவும் இருப்பதால்
அவர்களை நாட்டில் உள்ள சமூக விரோதிகள்
தங்கள் தீய நோக்கங்களை
நிறைவேற்றிக்கொள்ள அவர்களை
பயன்படுத்திகொள்கின்றனர்

எனினினும் இந்த உலகம் தோன்றிய காலம்தொட்டு
இந்த தொழிலில் ஈடுபட்டுவரும்
மீனவ சமுதாய மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து
அவர்கள் பாதுகாப்பாக தங்கள் தொழிலில் ஈடுபடவும்
நிம்மதியாக வாழவும் இறைவனை பிரார்த்திப்போம்.

Thursday, October 11, 2012

புத்தனும் புத்த பிக்குகளும்


புத்தனும் புத்த பிக்குகளும்













புத்தனும் புத்த பிக்குகளும் 

(படம்-கூகுல்-)

புலனடக்கம் உள்ளவனே புத்தன் 
புலனடக்கம் இல்லாதவன் பித்தன் 

தலையை மொட்டை அடித்துகொண்டால் 
மட்டும் போதுமா புத்த பிக்குகளே 
தடம் தவறி பேசாமலும் இருக்கவேண்டும்

உலகில் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு 
மற்றவரை அழிக்க நினைத்தால் 
அப்பாவி உயிர்கள்தான் போகும் 
அந்த பாவம் உங்களைதான் சேரும் 

பேசுவதற்கு முன்னும் ஏசுவதற்கு முன்னும் 
பார்க்க வேண்டும் முன்னும் பின்னும்
சிலைகளை பூசிப்பதால் மட்டும் 
வராது ஞானம் 
காவி வேட்டி கட்டி துறவிபோல் 
வேடமிட்டு யாசிப்பதால் மட்டும் போகாது அஞ்ஞானம் 

பொறுப்பில்லாமல் பேசுபவன் பலரின்
வெறுப்புக்குள்ளாவான் ,வேதனைப்பட்டு மடிவான் 

போதி மரத்தடியில் ஞானம் பெற்றான் புத்தன் 
ஆசையே  துன்பத்திற்கு காரணம் என்றான் 
புலனடக்கம் தேவை என்றான் 
ஆசையை விட்டுவிடு ,வேசையைபோல் 
அலைந்து திரியாதே என்று சொன்னான்

உயிரை கொல்லாதே ,அவைகளிடம் 
அன்பு காட்டு என்றான் 
அவன் கடவுளை பற்றி பேசவில்லை 
இந்த உலகின் நிலையாமையை 
பற்றி மட்டும் பேசினான் .

புத்தன் காட்டிய வழி பிற்காலத்தில் மதமாக வளர்ந்தது
இந்து மத கலாசாரத்தை தழுவி
புத்தன் சிலைகளும் விஹாரங்களும் பல்கி பெருகின 
உலகமெங்கும். 

ஆனால் அந்தோ அவன் காட்டிய அன்பு வழி மட்டும் 
குழி வெட்டி அவன் சிலைக்கு அடியில்  புதைக்கப்பட்டுவிட்டது. 

நாவடக்கமின்றி வன்முறையை தூண்டுகின்றார்
நாடாளும் அரசனின் துணையோடு
நாட்டு மக்களை வதைக்கின்றார் .
அனைவரின் நலம் நாடவேண்டிய புத்த பிக்குகள்.

அவர்கள் மீது மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை 
அவர்களும் மனிதர்களே.
 உள்ளத்தை மாற்றிகொள்ளாமல் 
உடலின் தோற்றத்தை மட்டும் மாற்றிகொண்டவர்கள்.
எப்படி தப்புவார்கள் உணர்ச்சிகளிடமிருந்து? 

Wednesday, September 19, 2012

உலகத்தில் திருடர்கள் சரி பாதி


உலகத்தில் திருடர்கள் சரி பாதி 

உலகத்தில் திருடர்கள் சரி பாதி என்றான் ஒரு கவிஞன் 
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது என்றான் 
அதே கவிஞன் 

அளவுக்கு மேலே பொருள் வைத்திருந்தாள் 
அவனும் திருடனும் ஒன்றாகும் என்று 
வேறு ஒரு கருத்தையும்  சொல்லி வைத்தான் 

திருடர்களைப் பற்றியும்,திருட்டை பற்றியும் எழுத்தாளர்களும் 
,கவிஞர்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும் 
அதை நியாய படுத்தி பல படங்களை எடுத்து விட்டார்கள் 

அப்பேர்ப்பட்ட மரியாதைக்குரியது திருட்டும் களவும் 
இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போல் தோன்றுகிறது 
ஆனால் இரண்டும் வேறு வேறாகத்தான் இருக்க முடியும் 

வீட்டை பூட்டி கொண்டு கடைக்கு சென்றேன். திரும்பி வந்து பார்த்தால்வீட்டின் கதவின் பூட்டை உள்ளே சென்று
இரும்பு பீரோவின் கதவை உடைத்து அதன் உள்ளே லாக்கரை உடைத்து நகைகளை திருடி கொண்டு திருடன் திருடிக்கொண்டு
போய்விட்டான் என்று தினமும் தொலை காட்சியிலே பேட்டி வரும் 

அதை பல முறை ஒளிபரப்பி எதிர்கட்சி தொல்லை காட்சிகள் ஆளும் கட்சியின் வயித்தெரிச்சலை கொட்டி கொள்ளும். .

பொதுவாக நாம் எல்லோரும் பல லட்சம் அல்லது 
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீட்டை
 சில நூறு ருபாய் மதிப்புள்ள பாதுகாப்பில்லாத 
 பூட்டுகளிடம் நம்பி விட்டு வெளியே செல்கிறோம் 
.இரும்பு பீரோவில் வைத்தாலும் மர பீரோவில்  வைத்தாலும் 
திருடனுக்கு அதை உடைத்து பொருட்களை
 எடுத்து கொண்டு போவது கடினமல்ல.

பல நேரங்களில் மனிதர்கள் இருக்கும்போதே 
அவன் கைவரிசையை காட்டி விடுகிறான். 
எதிர்ப்பவர்களை கொன்றும் விடுகிறான்.
 பிடிபட்டாலும் சில மாதங்கள் சிறையிலிருந்து 
அரசு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அங்குள்ள 
பல அனுபவம் வாய்ந்த திருடர்களிடம் 
புதிய திருட்டு முறைகளை கற்றுக்கொண்டு 
மீண்டும் தொழிலில் ஈடுபடுகிறான். 

திருட்டுக்கள் ஒவ்வொரு நாளும் 
அதி நவீனமான தொழில். நுட்பங்களுடன் வளர்ந்து வருகிறது.
திருட்டு நடைபெறாத துறையே இல்லை எனலாம்.
இந்த துறையில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தாங்களாகவே தொழில் செய்யலாம் அல்லது பிறருக்காக கூலிக்கும் தொழில் செய்யலாம். 

திருடர்களின் குறிக்கோள் ஒரு பெரிய கொள்ளையாக செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவதுதான். ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்ப்பதில்லை   அந்த அளவிற்கு மக்களின் வாழ்வோடு அது கலந்துவிட்டது.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில்  சனி  .
அகப்படாமல் தப்பியவர்கள் எதிகாலத்தில் நாட்டை ஆளும் பொறுப்பை கூட  பெற நேரிடலாம் அல்லது பெரிய மகானாக மக்களால் வணங்க படக்கூடும் 

மக்கள் பாடுபட்டு  சேர்த்த காசுகள் தங்க நகைகளாக மாறி தங்க நகை கடை அலமாரிகளிலிருந்து வீட்டு அலமாரிகளில் தஞ்சம் புகுகிறது. 
அதை கேப்மாரிகள் வீட்டு அலமாரிகளிலிருந்து புத்திசாலிதனமாக அபகரித்து விடுகிறார்கள். 

தங்கம் அங்கத்தை அழகு செய்வதாக மக்கள் நம்புகிறார்கள்  அதுவும்  கழுத்தில் இருந்தால்  வண்டிகளில் வந்து சங்கிலியை அறுத்து சென்று விடுகிறார்கள். 

கோயிலில் நகை அணிந்து கொண்டு கண் மூடி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது திருடன் அபேஸ் செய்து விடுகிறான்.

எங்கு போனாலும் திருட்டு திருடர்கள். பஸ்சிலும் திருடர்கள். ரெயிலிலும் திருடர்கள், அவர்கள் கடவுளைப்போல் எல்லா இடாதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மறைந்திருக்கிறார்கள் அவர்கள் இல்லாத இடமேஇல்லை  அவர்கள் 24மணி நேரமும் ஓய்வில்லாது செயல்படுகிறார்கள். 

இறைவன் திருடினால் அது லீலை; அது கொண்டாட்டம். மகிழ்ச்சி.
மனிதர்கள் திருடினால் அது குற்றம். அது துக்கம். 
இறைவனை கள்வன் என்று அன்போடு அழைக்கிறோம்.

நாம் கவனக்குறைவாக இருக்கும்போது அதை பயன்படுத்தி பொருட்களை கவ்ர்வதினால் திருடர்களுக்கு கள்வர்கள் என்று பெயர் வந்திருக்கலாம். 

நாம் செல்வத்திற்கு அதிபதியான இலக்குமிதேவியை திரு மகள் என்று அழைக்கிறோம். வேங்கட மலையை திருவேங்கடம் என்று அழைக்கிறோம். நம்மால் மதிக்கப்படும்   அனைத்திற்கும் திரு என்றஅடை மொழி நிச்சயம் உண்டு.

அதைபோல்தான் புத்திசாலிதனமாக செயல்பட்டு திடீர் செல்வந்தர்களாகும்  களவு செய்பவர்களையும் திரு அடைமொழி போட்டு திருட்டு என்றும் திருடர்கள் என்று அழைப்பதும் வழக்கத்தில் வந்துவிட்டதோ?

Monday, September 17, 2012

எலிகளும் நாய்களும்


எலிகளும் நாய்களும் மக்களை அச்சுறுத்தும் ஜந்துக்கள்

எலிகளும் நாய்களும் 
மக்களை அச்சுறுத்தும் ஜந்துக்கள் உலகில் கணக்கற்றவை 
அவைகளை மனிதன் கொன்று குவிக்க ஆயுதங்கள், 
பொறிகள், நஞ்சுகள் என புதிது புதிதாக 
கண்டுபிடித்து அழிக்க நினைத்தாலும் அவைகள் 
அவனை பழி வாங்குவதற்கு அஞ்சுவதில்லை.
அவைகளை அழிக்க அழிக்க அதிக அளவில் தோன்றி 
மனிதனை சத்தமில்லாமல் பழி வாங்கி 
அவனின் மன நிம்மதியை குலைக்கின்றன. 

பல நேரங்களில் அவன் உடலில்
தீரா வியாதிகளை உருவாக்கி 
அவன் உயிரை பறிக்கும் கொடிய செயலையும்
வெற்றிகரமாக அவைகள் நிறைவேற்றிவருகின்றன 
நம் நாட்டு மக்களை அச்சுறுத்தும் எலிகள் மற்றும்
நாய்களின் ஜம்பம்,சீன,தைவான்,வியட்நாம் நாட்டு ,
மக்களிடம் மட்டும் போணியாவதில்லை'
அவர்கள் உயிருக்கும் ஏதும் பங்கம்  விளைவதில்லை 

அவர்கள் அவைகளை கொன்று,வறுத்து,சுட்டு,
வேகவைத்து ,சூப் வைத்து சுவைத்து 
தின்று இன்புறுகிறார்கள்

நமக்கு அவைகள் துன்பம் விளைவிக்காதவரை 
எலி விநாயக பெருமானின் வாகனமாகவும் 
நாய்கள் பைரவரின் வாகனமாகவும், 
தத்தாத்ரேயருடன் இருக்கும் நாய்கள் 
ரூபத்தில் இருக்கும் வேதங்களாகவும்
போற்றி வணங்குவோம். 

எலிகளையும் நாய்களையும் பிடித்து விருப்பமோடு 
தின்னும் நாட்டு மக்களுக்கு அனுப்பி வைத்தால்
நம் பிரச்சினையும் தீரும் அந்நிய செலவாணியும் கிடைக்கும்
ஆனால் அதற்க்கு நம் மத செண்டிமெண்ட் இடம் கொடுக்காது
ப்ளூ கிராஸ் அதற்க்கு அனுமதிக்காது .  

ஆனால் எலி வெளியிடும் சிறுநீர் 
நம் உடலில் சென்றுவிட்டால் 
ச்டேப்ரோபிரோசிஸ் என்ற கொடிய நோயை
உருவாக்கி மனிதனின் உயிரை கொல்வதுடன்  
அவன் வங்கி கணக்கில் பல லட்சங்களையும்
காலி செய்து விடுகிறது 

எலியை கொல்வதற்கு வீட்டில் வாங்கி வைக்கும் விஷம் 
வீட்டில் உள்ள கோழைகள் தற்கொலை செய்வதற்குதான்
பெரிதும் பயன்படுகிறது 

தெருவில் வாகனங்களில் அடிபட்டு செத்த
எலிகளை காகங்கள் பொதுநல உணர்வோடு
எடுத்து சென்று பாதி உண்கிறது.
மீதியை எங்காவது போட்டுவிட்டு 
அதன் கடமையைமுடித்து கொள்ளுகிறது. 

பூனைகள் எலி பிடிக்கும் என்றாலும் இன்று
நம் நாட்டில் உலவும் உருவத்தில் பெரிய 
பெருச்சாளிகளை கண்டு அவைகள் 
அஞ்சி ஓடும் நிலை இருக்கிறது.

நம் நாட்டில் இதுதவிர ஊழல் பெருச்சாளிகள்
என்று ஒரு இனம் கோடிகணக்கில் பெருகி 
இன்று நம் நாட்டின் வளத்தையே தின்று 
கொழுத்து கொண்டிருக்கிறது 
அதை எதிர்ப்பவர்கள் படும் பாடு 
பாடையில் போவதுதான் 
அதேபோல்தான் நாய்கள் கடித்தால்
ராபீஸ் நோய் கண்டு மரணம் சம்பவிக்கிறது 

அதுசரி எலிகளும், நாய்களும் இன்று 
அதிக அளவில் பெருக காரணம் என்ன?
அதற்க்கு யார் காரணம்?

காரணம் சொல்ல தேவையில்லை 
பொறுப்பற்ற மக்கள் தான் காரணம். 
என்று அனைவருக்கும் தெரியும். 
இருந்தாலும் மக்கள் என்றும் தங்கள்
தவறை ஏற்றுகொள்ளும் கலாசாரம்
நம்மிடையே கிடையாது.
செய்யும் தவறை எல்லாம் செய்துவிட்டு
பொது சொத்துக்களை கொளுத்தி 
வேலை நிறுத்தம் கடைஅடைப்பு போராட்டம் 
போன்ற வீர தீர செயல்களை நடத்தி 
நிர்வாகம் மீதும் ஆளும் அரசுகள் மீதும் 
பழி சுமத்தி போராட்டம் நடத்தும் வாய்ச்சொல் வீரர்கள்.

உணவு பொருட்களை கண்ட கண்
இடங்களில் வீசுவதும், சாக்கடைகளில்,
ஏரிகளில்,நீர்நிலைகளில்,
பயணம் செய்யும் பேருந்துகளில்,
ரயில் வண்டிகளில் கொட்டுவதும் ,
அன்னதானம் என்ற பெயரிலும், 
விருந்துகள் என்று விழாக்களில் 
உணவு பொருட்களை தயார் செய்து 
உண்டு மீந்ததையும், 
சமைத்து மீந்ததையும் 
சத்திர வாசல்கள்முன் 
மலைபோல் குவித்து 
எலிகளுக்கும், நாய்களுக்கும் 
இலவசமாக உணவளித்து 
{நம் தாய் திருநாட்டில் நாய்களோடு போட்டி போடும் 
மனிதர்களும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்)
அவைகள் கோடிகணக்கில் பெருகவிட்டுவிட்டு.  
அளவுக்குமேல் உண்ட மயக்கத்தில் 
என்ன செய்வதென்றரியாது   தமக்கு உணவளித்து
தங்கள் பசி தீர்த்த  மக்களுக்கு நன்றிகடனாக 
அனைத்து விதமான தொல்லைகளையும்,
துன்பங்களையும் தந்து மகிழ்கின்றன 

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் 
வரிகள் தங்களுக்குதான் என்று 
அவைகள் ஏற்றுக்கொண்டு பயமில்லாமல் 
எங்கு வேண்டுமானாலும் 
ஓடி விளையாடி கண்டதை எல்லாம் 
கடித்து குதறி திரிகின்றன 

மக்கள் திருந்த வேண்டும் 
இல்லையேல் துன்பம் தொடரும்.

Tuesday, August 14, 2012

ஏற்ப்பது இகழ்ச்சி என்றால் அவ்வை மூதாட்டி

ஏற்ப்பது இகழ்ச்சி என்றால் அவ்வை மூதாட்டி 

ஆனால் இன்று தமிழ் நாட்டு மக்கள் ஏற்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி என்று ஆனந்த கூத்தாடுகிறார்கள்

ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு பிறகு பதவிக்கு வரும் அரசுகள் புதிதாக ஏதாவது இலவசமாக அறிவிப்பார்கள என்று ஏங்கி தவிக்கிறார்கள் 

தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவிக்கும் இலவசங்களை பொறுத்துதான் அடுத்த ஆட்சி அமையும். 

தமிழ் நாட்டில் தொடங்கிய இந்த எய்ட்ஸ் நோய் அனைத்து மாநிலங்களுக்கும் பரவி இன்று மைய்ய அரசையும் தொற்றிக்கொண்டு விட்டது.

அடித்தட்டு மக்களை என்றும் பிச்சைக்காரர்களாகவே வைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றுவிட்டன 

மக்களுக்கு தங்கள் வறுமை பற்றியோ தாங்கள் சிறுமை படுத்தப்படுவதை பற்றியோ கவலையில்லை.எப்போதும் ஏதாவது ஓசியில் கிடைத்தால் போதும்.போதாக்குறைக்கு இந்த பணியை தற்போது அனைத்து வியாபாரிகளும்  கடை பிடிக்க தொடங்கி விட்டார்கள். ஆடி தள்ளுபடி ,அசத்தல்அள்ளுபிடி ,என்று வருடம் முழுவதும் மக்களை ஏமாற்றி கொழுத்து வருகிறார்கள் 

கல்வி கற்பதற்கு மட்டும் பிச்சை எடுக்கலாம் என்பது தமிழ் பழமொழி

அனைத்தும் இலவசமாக கிடைக்கும்போது கல்வி எதற்கு கற்க வேண்டும். ஏதாவது வேலைக்கு சென்றால் காசு கிடைக்கும் என்ற போக்கு தமிழ் நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் உருவாகும் போக்கு அதிகரித்துவருகிறது  

Monday, August 13, 2012

தமிழன் என்று சொல்லடா?

தமிழன் என்று சொல்லடா?
தலை நிமிர்ந்து நில்லடா!
என்று ஒரு கவிஞன் எழுதி வைத்தான் 

ஆனால் இன்று அவ்வாறு எழுத முடியுமா?
இன்றைய தமிழன் எப்படி இருக்கிறான் என்பதை  என்று சற்று சிந்தித்து பார்த்தால் நல்லது 

மக்கள் தொகை சில லட்சங்களே உள்ள நாடுகள் ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளன .
எட்டு கோடி தமிழர்களில் ஒருவனுக்கு கூட ஒலிம்பிற்கு சென்று பதக்கம் வாங்க வக்கில்லை. அரசுகளுக்கும் அக்கறையில்லை 
ஒரு சிறிய அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ஒரு பெண் அதுவும் ஒரு தாய் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்று தந்துள்ளாள் .
ஆனால் தமிழ்நாட்டில் வெட்ககேடு. சொல்ல வார்த்தையில்லை.
ஆனால் தமிழர்கள் தங்க நகை மாளிகைகளில் தங்கம் வாங்குவதையே பெருமையாகவும் வாங்கிய தங்க நகைகளை மீண்டும் அடகு வைத்து வயிற்றை நிரப்பும் சாதனை போற்றத்தக்கது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டு சென்ற திருவள்ளுவருக்கு  சிலைகள் வைத்து அழகு பார்த்துவிட்டு அவர் போதித்த உண்மைகளை காற்றில் பறக்க விட்டு பேராசை பிடித்து சிறிதும் கூட சிந்திக்காது நடிகர்கள், நடிகைகள் விளம்பரங்களை உண்மையென நம்பி பாடுபட்டு சேமித்த காசுகளை நிதி நிறுவனங்களிடமும் , ரியல் எஸ்டேட் பேர்வழிகளிடமும் போலி மோசடி பேர்வழிகளிடமும் அவர்கள் தரும் அற்ப ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு u  கொடுத்து விட்டு பல ஆயிரம் முறை ஏமாந்தும் மீண்டும் மீண்டும் அவ்வாறே செய்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு 
கூப்பாடு போடும் சாதனையில் தமிழனை யாரும் மிஞ்ச முடியாது

எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் சுயநல வாதிகள் என்று தெரிந்திருந்தும் ஊழலில் சிக்கியவர்கள் என்று அறிந்திருந்தும் மீண்டும் அவர்களையே நம்பி தங்கள் சக்தியையும் தங்கள், உழைப்பையும்,காசையும் அவர்கள் காலடியில் போட்டுவிட்டு அவர்கள் போடும் இலவச பிச்சைக்காக அலைந்து திரியும் உயர்ந்த குணத்தில் சாதனை எந்த இனத்தால் படைக்கமுடியும்?

நடிகர்கள்,நடிகைகள் பின்னால் சுற்றி திரிந்து தங்கள் வாழ்வை தொலைக்கும் இளைஞர் பட்டாளம் எப்போது திருந்தும்? என்றும் திருந்தாது

ஒழுக்கமும் இல்லை, நல்ல பழக்க வழக்கங்களும் இல்லை. நேர்மை இல்லை நியாயம் இல்லை 
அனைவரிடமும் அனுசரித்து சாதிக்கும் சாமர்த்தியமும் இல்லை 

பழம் பெருமை பேசி ,குடி போதையில் காலம் கழிக்கும் தமிழினம் மீண்டும் தங்களின் போக்கை மாற்றிகொள்ளாமல்  உலக வரலாற்றில்  பெறுவது குதிரை கொம்பு
உண்மையை உணராது கற்பனைகளில் காலம் கழிப்போர் தமிழகத்தில்தான் அதிகம் என்பதுதான் உண்மை.
ஊருக்கு ஒரு சாதி சங்கம்,தெருவுக்கு ஒரு கட்சி தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த பிரச்சினையிலும் கருத்தொற்றுமை இல்லா போக்கு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போக்கு, சுயநலதிர்க்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழ்த்தரமாக செல்லும் போக்கு.பொறுப்பற்ற தன்மை சுற்றுபுறத்தை பாழ்படுத்தி விட்டு அரசை குறை கூறும் போக்கு தீண்டாமை போன்ற தீய குணங்கள்தான் இன்றைய தமிழினத்தின் வெளிப்பாடுகள். 


Sunday, August 5, 2012

CORRUPTION-A VIRUS OF HUMAN MINDS


CORRUPTION-A VIRUS OF HUMAN MINDS

When we all are corrupt 
then why put the  blame on 
certain quarters of the society only?

First the PEOPLE  are corrupt.

They have no patience to wait till their turn comes.
Hence they tend to find out an easy route to get things done.
They lure the concerned even though the person is refusing 
to do the favour.in the first instance.but it becomes a habit.in the wrong run. 
The politicians are minting lakhs of rupees for all the posts filled by Govt
from the job seekers.whatever may be their merit. 
The news spread and others follows suit..

The person who is addicted of extracting money for doing favors 
fails to distinguish between the haves and have-nots.which sparks problems.

When his  next superiors find that his subordinate 
is collecting huge bribes,they instigate them to part of 
their income to them.and so on it moves from bottom to top 
and then to the Minister concerned. 

After seeing all these things, the politicians,
 petition writers, anti social elements are also 
start extracting money from these persons
and finally they  become full pledged corrupt

To continue their business in the same place they bribes their
higherups and the area politicians.
The politicians will never distribute their allotments of funds 
to their area by the government without getting sizable commission
from the contractors who are going to do the work. 
to which the officials cannot reject.

Everybody know it but they wont voice any protest it.
because after deducting al commissions, still they can earn  
something by doing substandard work. 

The welfare schemes are so technically planned that 
if  a beneficiary has to get the assistance they have to produce
various certificates to be issued by various departments, 
and in certain cases certificate from politicians also,
enable them to fill up their coffers.
for giving false certificate in several cases relating to agelimit, 
educational qualification,time limit, income certificate,
caste certificate.etc.etc.

So the corruption is rampant in all and 
there is no use of pointing out one finger against somebody 
when three fingers are pointed towards the pointer. 

All must correct themselves to correct the corrupt 

Friday, August 3, 2012

பாருக்குள்ளே நல்ல நாடு -

பாருக்குள்ளே நல்ல நாடு -பாரத நாடு அன்று

இன்று ?

லஞ்ச தேசம் -இந்தியா   

லஞ்ச நாடு- இந்தியாவின் அனைத்து நாடுகளும் (மாநிலங்களும் )

நீதிபதிகளே லஞ்சம் வாங்கி
சிறைக்கு சென்ற பெருமை பெற்ற மாநிலம் -ஆந்திரம் மற்றும் கர்நாடகா

ஒழுக்கம் தவறிய மாநில ஆளுநர்கள் உள்ள நாடு -இந்தியா

அரசு பணத்தை கொள்ளைஅடித்து வெட்கமின்றி
உலா வரும் அமைச்சர்கள் நிறைந்த நாடு-இந்தியா

அரசியலில் பிழை செய்தோருக்கு அறம்  கூற்றாகும் அன்று 


இன்று ?

அடுத்த தேர்தலில் அமைச்சராவார் போட்டியில் வென்று 

நீதிக்கு பதியாய் விளங்கினார்கள் அன்று 

நிதிக்கு பதியாய் விளங்குகிறார்கள் இன்று 

குடிமக்களுக்காக ஆட்சி நடந்தது அன்று 

மக்களை குடிக்க வைத்து அழிப்பதற்காக ஆட்சி நடக்கிறது இன்று
  

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா?

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா 
அல்லது மக்களுக்கா?

The Government is for the people 

of the people 

by the people.


But what is the reality ?

But nowadays the government is 
buying the people by distributing freebies
during election and run the government 
after winning the election 
with the same technique
 .
This is followed by all 
successive governments
in all the states in India 
with increased freebies at the
cost of taxpayers and 
law abiding citizens.

The so called poor who receive the 
maximum benefits are not contributing 
to the society as expected.
and improve their way of life 

Because they receive everything free 
they waste their precious earnings 
on liquor ,and destroys their family and 
they continue to live on poverty
and then starts blaming the government.

Under the influence of liquor
they indulge in all sort of anti-social
activities. and causing nuisance to
the law abiding citizens. 

TV channels ,cinemas, politicians 
always keep the masses under their 
control by brainwashing and changed their character
to blindly follow them for their selfish ends.

This bad practice has spread all over India like a decease
Masses are always emotional in approach and react to
any small incident provoked by the anti social elements 
and politicians and religious fanatics engage
themselves in destroying public properties and creating
social unrest between castes and religious followers.

The riches become richer and the poor becomes poorer 
thus the gap between them is widened day by day 

Haves and havenots gave way to corruption, 
exploitation  ,increase of anti social activities 
which make the  governments cannot go with their 
developments.

Their energy and resources are forcibly wasted 
in controlling useless agitations, arson and looting 
by anti social element triggered by selfish political and religious fanatics.

Due to wrong policies of governments. unemployment, poverty prevailing all over the world causing unrest in the 
minds of people resorting to agitations ,protests,creating unrest.by suppressing the feelings of the people the governments are waging war against their own people and kill the innocents mercilessly in many parts of the world. 

Any  type of government whether it is dictatorship or democratic ,if they fail to serve people to improve their living condition will not survive. 

But it has become a distant dream now. 

.
This situation should be changed 
for the welfare of all 

GOD alone can save this planet and its people 
in this situation. 

Tuesday, July 31, 2012

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை
இது ஒரு படத்தின் பெயர்.

பயணங்கள் முடிவதில்லை .எந்த பயணம்?
இன்று இது ஒரு கேள்விக்குறியாகிவிட்டது

கல்வி பயில பள்ளி செல்லும் குழந்தைகள்
பள்ளியிலிருந்து உயிருடன் வீடு திரும்புமா என்பது
இன்று கேள்விகுறியாகிவிட்டது

மரணம் அவர்களுக்கு எந்த உருவத்தில் வரும் என்று
ஜோசியர்களால் கூட கணிக்க முடியாது

ஆ(சிறி )சிரியர்களால் பாலியல் தொல்லை, சக மாணவர்களின்
வெறித்தனம் ,சாதி பாகுபாடு ,என பலவிதமான
காரணங்களை சொல்லலாம்

சிரித்த முகத்துடன் பள்ளி சென்ற குழந்தை
மரித்து விட்ட செய்தி கேட்டுதுயரத்தில் மூழ்கும் பெற்றோர்களின்
எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது

இந்த அவல நிலைக்கு யார் காரணம் ?

அரசு அதிகாரிகளா,வாகன ஓட்டுனர்களா பள்ளி நிர்வாகமா
அல்லதுபொறுப்பற்ற இந்த சமுதாயமா?

இவை அனைத்திற்கும் மூல காரணம் ,லஞ்சம், அலட்சிய போக்கு 
மக்களின் மனதில் மூடிக்கிடக்கும் மனித நேயமற்ற தன்மை ,ஒருவரை சுரண்டி பிழைக்கும் அற்ப மனப்பான்மை ,பேராசை,வடிகட்டிய சுயநலம் 
தன்னை சுற்றி நடக்கும் அனைத்து அநியாயங்களை 
கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கும் சமூகம்தான் காரணம் 

அசம்பாவித சம்பவம் நடந்தால் பொது சொத்துக்களை அழித்து ஆத்திரத்தை 
தீர்த்துக்கொண்டு மீண்டும் அவரவர் வேலையை பார்க்க போகும் அநாகரீகமான போக்கு 

தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேற அப்பாவி உயிர்களை கடவுளுக்கு உயிர்பலி கொடுக்கும் மக்கள் இருக்கும்வரை 
சமுதாய கோரிக்கைகள் நிறைவேற மனித சமுதாயம் தன் ஒரு பகுதியினரை தாரை வார்த்துதான் ஆகவேண்டும் என்பது விதி.

ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தும்வரை நல்லது நடக்க வாய்ப்பில்லை
.
லஞ்சத்திற்கு அனைவரும் உடந்தையாக இருந்துகொண்டு லஞ்சத்தை ஒழிப்பது பற்றி போராட்டம் நடத்தும் வாய் சொல் வீரர்களை கொண்டது தற்காலத்திய மக்கள் கூட்டம்.

மாறுவதற்கு மனம் வேண்டும்
இல்லையேல் தினம் தினம் இதுபோன்ற செய்திகள் நம் நெஞ்சை உலுக்கிகொண்டிருக்கும். 

Monday, July 30, 2012

ஆடியிலே அதிரிஷ்டக்காற்று

ஆடியிலே அதிரிஷ்டக்காற்று


என்று எங்கு பார்த்தாலும் கண்ணை பறிக்கும் விளம்பரங்கள்

கண் விழித்திருக்கும் நேரம் முழுதிலும் இசை
என்ற பெயரில் காதை   பிளக்கும் நாராசமான ஓசை

போதாக்குறைக்கு அம்மன் பக்தி பாடல்கள் என்ற பெயரில்
இசைகருவிகளின் இரைச்சலும் அதனூடே
ஒலிக்கும் பாடகர்களின் பாடல்களும்

அது சரி .யாருக்கு ஆடியிலே   அதிரிஷ்டக்காற்று  வீசுகிறது?

மக்களுக்கா அல்லது அவர்களை மூளை சலவை செய்து தங்களிடம் தேங்கியுள்ள சரக்குகளை தந்திரமாக மக்கள் தலையில் கட்டி கோடி கோடியாய் கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளுக்கா?

பெரும்பாலான வீடுகளில் ஏற்கெனவே துணிமணிகள் நிரம்பி வழிகின்றன
கையால் துணி துவைத்த காலம் போய் இன்று வீட்டு வீடு வாஷிங் மெஷின்கள் இடத்தை அடைத்துக்கொண்டு விட்டன .

போதாக்குறைக்கு மின்சாதன பொருட்கள் வீடுகளில் பயன்படுதபடுகிறதோ இல்லையோ வீட்டில் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கின்றன

தங்க நகை வீட்டில் வைத்திருந்தாலும் அதை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை ,அதை வைத்திருப்பவர்களுக்கும் சேர்த்துதான் 
அதை அணிந்து வெளியில் சென்றால் ஒன்று நகையை பறி கொடுக்கவேண்டும் அல்லது உயிரையும் அதனோடு சேர்த்து பறிகொடுக்க வேண்டும் 

இவ்வாறிருக்க சில கோடி ரூபாய்கள் செலவில் தூண்டில் போட்டு பல கோடிகளை  அநாயாசமாக அள்ளி குவிக்கும் வியாபாரிகளின் விளம்பர மாயையில் மயங்கி, அவர்கள் விரிக்கும் மோசடி வலையில் சிக்கி மேலும் மேலும் பொருட்களை வாங்கி குவித்து பெரும் கடனாளிகளாக ஆகும் இந்த மூட ஜனங்களை என்னவென்று சொல்வது?

பாடுபட்டு உழைத்து சேர்த்த காசை வீணாக்காதீர் 
தேவைப்பட்டால் மட்டுமே பொருட்களை வாங்குவீர்

மின்கட்டணம் உயர்ந்துவிட்டதால் மின்சாதன பொருட்களின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பீர்

தங்கநகை தற்காலத்தில் உயிருக்கு பகை .என்பதை மறவாதீர். 

கைபேசிகளின் இரைச்சலால் காதுகள் செவிடாய் போன மக்களுக்கு 
கணினி, தொலைகாட்சி பார்த்து பார்த்து குருடாய் போன மக்களுக்கு 
விளம்பரங்களை அப்படியே உண்மையென நம்பும் அப்பாவிகளுக்கு 
அரசு மதுக்கடைகளில் தங்கள் கைகாசை தொலைக்கும் குடிமக்களுக்கு 
இந்த செய்தி போய் சேருமோ?
கேள்விக்குறிதான்!


Thursday, March 8, 2012

மீண்டும் நமது இந்திய கலாசாரத்திற்கு மாறுவோம்


மீண்டும்  நமது  இந்திய  கலாசாரத்திற்கு  மாறுவோம்

காலையில்  எழுந்ததும்  பல்  துலக்க 
டூத்  ப்ருஷையும் பற்பசையையும் 
பல்லாண்டுகளாக  நாம்  பயன்படுத்தி  வருகிறோம்
 .
விளைவு  ஒவ்வொரு  ஆண்டும்  இதற்காக  மட்டும் 
ஒவ்வொரு குடும்பத்தில்  மக்கள் 
 பல  ஆயிரம்  ரூபாய்களை  தண்டம்  அழுகின்றோம்
 .
அப்படி  இருந்தும்  பற்கள்  கெட்டு  போய்விடுகின்றன

காரணம்  பற்பசையில்  
எந்த  மருத்துவ  குணங்களும்  கிடையாது 
சுண்ணாம்பும்  ,நுரை  வரும்  ஒரு  ரசாயனமும்தான்  உள்ளது 
.
இதைதவிர  சில மாதங்களுக்கு  ஒரு முறை 
டூத் ப்ருஷை   மாற்ற  வேண்டும் 
அதற்க்கு  வேறு  தண்டம் அழ  வேண்டும்

இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை 
சுலபமாக மேனாட்டு நிறுவனகள் 
நமது நாட்டின் வளத்தை கொள்ளையடித்து கொழுக்கின்றன
  
பல்வலி  என்று  பல் வைத்தியர்களிடம்  சென்றால்
பல ஆயிரங்களை  இழக்க  வேண்டியுள்ளது 
.
ஆனால்  கடந்த  காலங்களில் 
எங்கும் இலவசமாக கிடைக்கும் 
வெறும்  ஆலம்  குச்சி  அல்லது  
வேப்பம்  குச்சிகளால்  பல் துலக்கினர் 

நூறு  வயது  வரை  பற்கள் நன்றாக  இருந்தது 
பல்  நோய்கள்  கிடையாது 
.
இன்று  பிறக்கும்  குழந்தைகளே  
பல் நோயுடனும்   பிறக்கின்றன 
வாலிப  வயதிற்குள் மொத்த  பற்களும்  
சொத்தை  பிடித்து  விடுகின்றன

இனிப்பு  பொருட்களும் , மாவு  பொருட்களும் 
பல்லை  சீரழிக்கின்றன 
இதை  யாரும்  கண்டு  கொள்வது  கிடையாது

ஒவ்வொருவரும் தம்  வாழ்நாளில்  பல்லுக்கு  மட்டும்
பல லட்சங்களை  செலவழிக்கிறார்கள்

அதற்காக  அவர்கள்  கூடுதலாக உழைக்க  வேண்டியிருக்கிறது 
பல் கெட்டு விடுவதால்  கிருமிகள்  உற்பத்தியாகி
முழு  உடல்நலமும்  கேட்டு சம்பாதிப்பது    அனைத்தையும் 
உடலுக்கே  செலவழித்து  மாத்திரைகளை முழுங்கியே
ஆயுளை இக்கால  மக்கள் முடிக்கின்றன 
.
இந்நிலை  மாற  வேண்டுமென்றால் 
மக்கள் வேப்பம் குச்சியை  மெதுவாக 
மென்று பிரஷ்  போல்  ஆக்கி  அதில்  பல்லை துலக்கினால் 
பல்லில்  உள்ள  கிருமிகளும்  சாகும்
பல்லும்  சுத்தமாகும்

வீணான  செலவும்  மிச்சம்  ஆகும் 
உடல்நலமும் காக்கப்படும் 

பலகேட்டு பலமணி நேரம் பல் மருத்துவமனைகளில்
காத்திருக்கும் நேரத்தை விட சில நிமிடங்கள் 
தினமும் பொறுமையாக பல் துலக்கவும் நேரம் 
ஒதுக்கினால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்

அனால்  மேனாட்டு  மோகத்தில்  மூழ்கி  கிடக்கும்  இந்த  சமூகம்   இதை  நிச்சயம்    ஏற்றுகொள்ளாது