Tuesday, July 31, 2012

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை
இது ஒரு படத்தின் பெயர்.

பயணங்கள் முடிவதில்லை .எந்த பயணம்?
இன்று இது ஒரு கேள்விக்குறியாகிவிட்டது

கல்வி பயில பள்ளி செல்லும் குழந்தைகள்
பள்ளியிலிருந்து உயிருடன் வீடு திரும்புமா என்பது
இன்று கேள்விகுறியாகிவிட்டது

மரணம் அவர்களுக்கு எந்த உருவத்தில் வரும் என்று
ஜோசியர்களால் கூட கணிக்க முடியாது

ஆ(சிறி )சிரியர்களால் பாலியல் தொல்லை, சக மாணவர்களின்
வெறித்தனம் ,சாதி பாகுபாடு ,என பலவிதமான
காரணங்களை சொல்லலாம்

சிரித்த முகத்துடன் பள்ளி சென்ற குழந்தை
மரித்து விட்ட செய்தி கேட்டுதுயரத்தில் மூழ்கும் பெற்றோர்களின்
எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது

இந்த அவல நிலைக்கு யார் காரணம் ?

அரசு அதிகாரிகளா,வாகன ஓட்டுனர்களா பள்ளி நிர்வாகமா
அல்லதுபொறுப்பற்ற இந்த சமுதாயமா?

இவை அனைத்திற்கும் மூல காரணம் ,லஞ்சம், அலட்சிய போக்கு 
மக்களின் மனதில் மூடிக்கிடக்கும் மனித நேயமற்ற தன்மை ,ஒருவரை சுரண்டி பிழைக்கும் அற்ப மனப்பான்மை ,பேராசை,வடிகட்டிய சுயநலம் 
தன்னை சுற்றி நடக்கும் அனைத்து அநியாயங்களை 
கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கும் சமூகம்தான் காரணம் 

அசம்பாவித சம்பவம் நடந்தால் பொது சொத்துக்களை அழித்து ஆத்திரத்தை 
தீர்த்துக்கொண்டு மீண்டும் அவரவர் வேலையை பார்க்க போகும் அநாகரீகமான போக்கு 

தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேற அப்பாவி உயிர்களை கடவுளுக்கு உயிர்பலி கொடுக்கும் மக்கள் இருக்கும்வரை 
சமுதாய கோரிக்கைகள் நிறைவேற மனித சமுதாயம் தன் ஒரு பகுதியினரை தாரை வார்த்துதான் ஆகவேண்டும் என்பது விதி.

ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தும்வரை நல்லது நடக்க வாய்ப்பில்லை
.
லஞ்சத்திற்கு அனைவரும் உடந்தையாக இருந்துகொண்டு லஞ்சத்தை ஒழிப்பது பற்றி போராட்டம் நடத்தும் வாய் சொல் வீரர்களை கொண்டது தற்காலத்திய மக்கள் கூட்டம்.

மாறுவதற்கு மனம் வேண்டும்
இல்லையேல் தினம் தினம் இதுபோன்ற செய்திகள் நம் நெஞ்சை உலுக்கிகொண்டிருக்கும். 

Monday, July 30, 2012

ஆடியிலே அதிரிஷ்டக்காற்று

ஆடியிலே அதிரிஷ்டக்காற்று


என்று எங்கு பார்த்தாலும் கண்ணை பறிக்கும் விளம்பரங்கள்

கண் விழித்திருக்கும் நேரம் முழுதிலும் இசை
என்ற பெயரில் காதை   பிளக்கும் நாராசமான ஓசை

போதாக்குறைக்கு அம்மன் பக்தி பாடல்கள் என்ற பெயரில்
இசைகருவிகளின் இரைச்சலும் அதனூடே
ஒலிக்கும் பாடகர்களின் பாடல்களும்

அது சரி .யாருக்கு ஆடியிலே   அதிரிஷ்டக்காற்று  வீசுகிறது?

மக்களுக்கா அல்லது அவர்களை மூளை சலவை செய்து தங்களிடம் தேங்கியுள்ள சரக்குகளை தந்திரமாக மக்கள் தலையில் கட்டி கோடி கோடியாய் கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளுக்கா?

பெரும்பாலான வீடுகளில் ஏற்கெனவே துணிமணிகள் நிரம்பி வழிகின்றன
கையால் துணி துவைத்த காலம் போய் இன்று வீட்டு வீடு வாஷிங் மெஷின்கள் இடத்தை அடைத்துக்கொண்டு விட்டன .

போதாக்குறைக்கு மின்சாதன பொருட்கள் வீடுகளில் பயன்படுதபடுகிறதோ இல்லையோ வீட்டில் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கின்றன

தங்க நகை வீட்டில் வைத்திருந்தாலும் அதை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை ,அதை வைத்திருப்பவர்களுக்கும் சேர்த்துதான் 
அதை அணிந்து வெளியில் சென்றால் ஒன்று நகையை பறி கொடுக்கவேண்டும் அல்லது உயிரையும் அதனோடு சேர்த்து பறிகொடுக்க வேண்டும் 

இவ்வாறிருக்க சில கோடி ரூபாய்கள் செலவில் தூண்டில் போட்டு பல கோடிகளை  அநாயாசமாக அள்ளி குவிக்கும் வியாபாரிகளின் விளம்பர மாயையில் மயங்கி, அவர்கள் விரிக்கும் மோசடி வலையில் சிக்கி மேலும் மேலும் பொருட்களை வாங்கி குவித்து பெரும் கடனாளிகளாக ஆகும் இந்த மூட ஜனங்களை என்னவென்று சொல்வது?

பாடுபட்டு உழைத்து சேர்த்த காசை வீணாக்காதீர் 
தேவைப்பட்டால் மட்டுமே பொருட்களை வாங்குவீர்

மின்கட்டணம் உயர்ந்துவிட்டதால் மின்சாதன பொருட்களின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பீர்

தங்கநகை தற்காலத்தில் உயிருக்கு பகை .என்பதை மறவாதீர். 

கைபேசிகளின் இரைச்சலால் காதுகள் செவிடாய் போன மக்களுக்கு 
கணினி, தொலைகாட்சி பார்த்து பார்த்து குருடாய் போன மக்களுக்கு 
விளம்பரங்களை அப்படியே உண்மையென நம்பும் அப்பாவிகளுக்கு 
அரசு மதுக்கடைகளில் தங்கள் கைகாசை தொலைக்கும் குடிமக்களுக்கு 
இந்த செய்தி போய் சேருமோ?
கேள்விக்குறிதான்!