Wednesday, September 19, 2012

உலகத்தில் திருடர்கள் சரி பாதி


உலகத்தில் திருடர்கள் சரி பாதி 

உலகத்தில் திருடர்கள் சரி பாதி என்றான் ஒரு கவிஞன் 
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது என்றான் 
அதே கவிஞன் 

அளவுக்கு மேலே பொருள் வைத்திருந்தாள் 
அவனும் திருடனும் ஒன்றாகும் என்று 
வேறு ஒரு கருத்தையும்  சொல்லி வைத்தான் 

திருடர்களைப் பற்றியும்,திருட்டை பற்றியும் எழுத்தாளர்களும் 
,கவிஞர்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும் 
அதை நியாய படுத்தி பல படங்களை எடுத்து விட்டார்கள் 

அப்பேர்ப்பட்ட மரியாதைக்குரியது திருட்டும் களவும் 
இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போல் தோன்றுகிறது 
ஆனால் இரண்டும் வேறு வேறாகத்தான் இருக்க முடியும் 

வீட்டை பூட்டி கொண்டு கடைக்கு சென்றேன். திரும்பி வந்து பார்த்தால்வீட்டின் கதவின் பூட்டை உள்ளே சென்று
இரும்பு பீரோவின் கதவை உடைத்து அதன் உள்ளே லாக்கரை உடைத்து நகைகளை திருடி கொண்டு திருடன் திருடிக்கொண்டு
போய்விட்டான் என்று தினமும் தொலை காட்சியிலே பேட்டி வரும் 

அதை பல முறை ஒளிபரப்பி எதிர்கட்சி தொல்லை காட்சிகள் ஆளும் கட்சியின் வயித்தெரிச்சலை கொட்டி கொள்ளும். .

பொதுவாக நாம் எல்லோரும் பல லட்சம் அல்லது 
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீட்டை
 சில நூறு ருபாய் மதிப்புள்ள பாதுகாப்பில்லாத 
 பூட்டுகளிடம் நம்பி விட்டு வெளியே செல்கிறோம் 
.இரும்பு பீரோவில் வைத்தாலும் மர பீரோவில்  வைத்தாலும் 
திருடனுக்கு அதை உடைத்து பொருட்களை
 எடுத்து கொண்டு போவது கடினமல்ல.

பல நேரங்களில் மனிதர்கள் இருக்கும்போதே 
அவன் கைவரிசையை காட்டி விடுகிறான். 
எதிர்ப்பவர்களை கொன்றும் விடுகிறான்.
 பிடிபட்டாலும் சில மாதங்கள் சிறையிலிருந்து 
அரசு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அங்குள்ள 
பல அனுபவம் வாய்ந்த திருடர்களிடம் 
புதிய திருட்டு முறைகளை கற்றுக்கொண்டு 
மீண்டும் தொழிலில் ஈடுபடுகிறான். 

திருட்டுக்கள் ஒவ்வொரு நாளும் 
அதி நவீனமான தொழில். நுட்பங்களுடன் வளர்ந்து வருகிறது.
திருட்டு நடைபெறாத துறையே இல்லை எனலாம்.
இந்த துறையில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தாங்களாகவே தொழில் செய்யலாம் அல்லது பிறருக்காக கூலிக்கும் தொழில் செய்யலாம். 

திருடர்களின் குறிக்கோள் ஒரு பெரிய கொள்ளையாக செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவதுதான். ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்ப்பதில்லை   அந்த அளவிற்கு மக்களின் வாழ்வோடு அது கலந்துவிட்டது.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில்  சனி  .
அகப்படாமல் தப்பியவர்கள் எதிகாலத்தில் நாட்டை ஆளும் பொறுப்பை கூட  பெற நேரிடலாம் அல்லது பெரிய மகானாக மக்களால் வணங்க படக்கூடும் 

மக்கள் பாடுபட்டு  சேர்த்த காசுகள் தங்க நகைகளாக மாறி தங்க நகை கடை அலமாரிகளிலிருந்து வீட்டு அலமாரிகளில் தஞ்சம் புகுகிறது. 
அதை கேப்மாரிகள் வீட்டு அலமாரிகளிலிருந்து புத்திசாலிதனமாக அபகரித்து விடுகிறார்கள். 

தங்கம் அங்கத்தை அழகு செய்வதாக மக்கள் நம்புகிறார்கள்  அதுவும்  கழுத்தில் இருந்தால்  வண்டிகளில் வந்து சங்கிலியை அறுத்து சென்று விடுகிறார்கள். 

கோயிலில் நகை அணிந்து கொண்டு கண் மூடி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது திருடன் அபேஸ் செய்து விடுகிறான்.

எங்கு போனாலும் திருட்டு திருடர்கள். பஸ்சிலும் திருடர்கள். ரெயிலிலும் திருடர்கள், அவர்கள் கடவுளைப்போல் எல்லா இடாதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மறைந்திருக்கிறார்கள் அவர்கள் இல்லாத இடமேஇல்லை  அவர்கள் 24மணி நேரமும் ஓய்வில்லாது செயல்படுகிறார்கள். 

இறைவன் திருடினால் அது லீலை; அது கொண்டாட்டம். மகிழ்ச்சி.
மனிதர்கள் திருடினால் அது குற்றம். அது துக்கம். 
இறைவனை கள்வன் என்று அன்போடு அழைக்கிறோம்.

நாம் கவனக்குறைவாக இருக்கும்போது அதை பயன்படுத்தி பொருட்களை கவ்ர்வதினால் திருடர்களுக்கு கள்வர்கள் என்று பெயர் வந்திருக்கலாம். 

நாம் செல்வத்திற்கு அதிபதியான இலக்குமிதேவியை திரு மகள் என்று அழைக்கிறோம். வேங்கட மலையை திருவேங்கடம் என்று அழைக்கிறோம். நம்மால் மதிக்கப்படும்   அனைத்திற்கும் திரு என்றஅடை மொழி நிச்சயம் உண்டு.

அதைபோல்தான் புத்திசாலிதனமாக செயல்பட்டு திடீர் செல்வந்தர்களாகும்  களவு செய்பவர்களையும் திரு அடைமொழி போட்டு திருட்டு என்றும் திருடர்கள் என்று அழைப்பதும் வழக்கத்தில் வந்துவிட்டதோ?

Monday, September 17, 2012

எலிகளும் நாய்களும்


எலிகளும் நாய்களும் மக்களை அச்சுறுத்தும் ஜந்துக்கள்

எலிகளும் நாய்களும் 
மக்களை அச்சுறுத்தும் ஜந்துக்கள் உலகில் கணக்கற்றவை 
அவைகளை மனிதன் கொன்று குவிக்க ஆயுதங்கள், 
பொறிகள், நஞ்சுகள் என புதிது புதிதாக 
கண்டுபிடித்து அழிக்க நினைத்தாலும் அவைகள் 
அவனை பழி வாங்குவதற்கு அஞ்சுவதில்லை.
அவைகளை அழிக்க அழிக்க அதிக அளவில் தோன்றி 
மனிதனை சத்தமில்லாமல் பழி வாங்கி 
அவனின் மன நிம்மதியை குலைக்கின்றன. 

பல நேரங்களில் அவன் உடலில்
தீரா வியாதிகளை உருவாக்கி 
அவன் உயிரை பறிக்கும் கொடிய செயலையும்
வெற்றிகரமாக அவைகள் நிறைவேற்றிவருகின்றன 
நம் நாட்டு மக்களை அச்சுறுத்தும் எலிகள் மற்றும்
நாய்களின் ஜம்பம்,சீன,தைவான்,வியட்நாம் நாட்டு ,
மக்களிடம் மட்டும் போணியாவதில்லை'
அவர்கள் உயிருக்கும் ஏதும் பங்கம்  விளைவதில்லை 

அவர்கள் அவைகளை கொன்று,வறுத்து,சுட்டு,
வேகவைத்து ,சூப் வைத்து சுவைத்து 
தின்று இன்புறுகிறார்கள்

நமக்கு அவைகள் துன்பம் விளைவிக்காதவரை 
எலி விநாயக பெருமானின் வாகனமாகவும் 
நாய்கள் பைரவரின் வாகனமாகவும், 
தத்தாத்ரேயருடன் இருக்கும் நாய்கள் 
ரூபத்தில் இருக்கும் வேதங்களாகவும்
போற்றி வணங்குவோம். 

எலிகளையும் நாய்களையும் பிடித்து விருப்பமோடு 
தின்னும் நாட்டு மக்களுக்கு அனுப்பி வைத்தால்
நம் பிரச்சினையும் தீரும் அந்நிய செலவாணியும் கிடைக்கும்
ஆனால் அதற்க்கு நம் மத செண்டிமெண்ட் இடம் கொடுக்காது
ப்ளூ கிராஸ் அதற்க்கு அனுமதிக்காது .  

ஆனால் எலி வெளியிடும் சிறுநீர் 
நம் உடலில் சென்றுவிட்டால் 
ச்டேப்ரோபிரோசிஸ் என்ற கொடிய நோயை
உருவாக்கி மனிதனின் உயிரை கொல்வதுடன்  
அவன் வங்கி கணக்கில் பல லட்சங்களையும்
காலி செய்து விடுகிறது 

எலியை கொல்வதற்கு வீட்டில் வாங்கி வைக்கும் விஷம் 
வீட்டில் உள்ள கோழைகள் தற்கொலை செய்வதற்குதான்
பெரிதும் பயன்படுகிறது 

தெருவில் வாகனங்களில் அடிபட்டு செத்த
எலிகளை காகங்கள் பொதுநல உணர்வோடு
எடுத்து சென்று பாதி உண்கிறது.
மீதியை எங்காவது போட்டுவிட்டு 
அதன் கடமையைமுடித்து கொள்ளுகிறது. 

பூனைகள் எலி பிடிக்கும் என்றாலும் இன்று
நம் நாட்டில் உலவும் உருவத்தில் பெரிய 
பெருச்சாளிகளை கண்டு அவைகள் 
அஞ்சி ஓடும் நிலை இருக்கிறது.

நம் நாட்டில் இதுதவிர ஊழல் பெருச்சாளிகள்
என்று ஒரு இனம் கோடிகணக்கில் பெருகி 
இன்று நம் நாட்டின் வளத்தையே தின்று 
கொழுத்து கொண்டிருக்கிறது 
அதை எதிர்ப்பவர்கள் படும் பாடு 
பாடையில் போவதுதான் 
அதேபோல்தான் நாய்கள் கடித்தால்
ராபீஸ் நோய் கண்டு மரணம் சம்பவிக்கிறது 

அதுசரி எலிகளும், நாய்களும் இன்று 
அதிக அளவில் பெருக காரணம் என்ன?
அதற்க்கு யார் காரணம்?

காரணம் சொல்ல தேவையில்லை 
பொறுப்பற்ற மக்கள் தான் காரணம். 
என்று அனைவருக்கும் தெரியும். 
இருந்தாலும் மக்கள் என்றும் தங்கள்
தவறை ஏற்றுகொள்ளும் கலாசாரம்
நம்மிடையே கிடையாது.
செய்யும் தவறை எல்லாம் செய்துவிட்டு
பொது சொத்துக்களை கொளுத்தி 
வேலை நிறுத்தம் கடைஅடைப்பு போராட்டம் 
போன்ற வீர தீர செயல்களை நடத்தி 
நிர்வாகம் மீதும் ஆளும் அரசுகள் மீதும் 
பழி சுமத்தி போராட்டம் நடத்தும் வாய்ச்சொல் வீரர்கள்.

உணவு பொருட்களை கண்ட கண்
இடங்களில் வீசுவதும், சாக்கடைகளில்,
ஏரிகளில்,நீர்நிலைகளில்,
பயணம் செய்யும் பேருந்துகளில்,
ரயில் வண்டிகளில் கொட்டுவதும் ,
அன்னதானம் என்ற பெயரிலும், 
விருந்துகள் என்று விழாக்களில் 
உணவு பொருட்களை தயார் செய்து 
உண்டு மீந்ததையும், 
சமைத்து மீந்ததையும் 
சத்திர வாசல்கள்முன் 
மலைபோல் குவித்து 
எலிகளுக்கும், நாய்களுக்கும் 
இலவசமாக உணவளித்து 
{நம் தாய் திருநாட்டில் நாய்களோடு போட்டி போடும் 
மனிதர்களும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்)
அவைகள் கோடிகணக்கில் பெருகவிட்டுவிட்டு.  
அளவுக்குமேல் உண்ட மயக்கத்தில் 
என்ன செய்வதென்றரியாது   தமக்கு உணவளித்து
தங்கள் பசி தீர்த்த  மக்களுக்கு நன்றிகடனாக 
அனைத்து விதமான தொல்லைகளையும்,
துன்பங்களையும் தந்து மகிழ்கின்றன 

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் 
வரிகள் தங்களுக்குதான் என்று 
அவைகள் ஏற்றுக்கொண்டு பயமில்லாமல் 
எங்கு வேண்டுமானாலும் 
ஓடி விளையாடி கண்டதை எல்லாம் 
கடித்து குதறி திரிகின்றன 

மக்கள் திருந்த வேண்டும் 
இல்லையேல் துன்பம் தொடரும்.