Wednesday, March 7, 2012

இன்று உலக மகளிர் தினம்

இன்று உலக மகளிர் தினம்


எங்கும் கொண்டாட்டம்தான் தான்
மகிழ்ச்சி .மகிழ்ச்சி.மகிழ்ச்சி

ஆனால் இந்த புகழ்ச்சியில்
மயங்கிவிடாதீர்கள் 
பெண்களே
.
இது ஒருநாள் கூத்துதான்

மீதம் 364நாட்களும் நீங்கள் படும் 
அல்லல்கள் மனதில் உள்ளதை 
வெளியில் சொல்ல முடியாமல் 
வெளிவரும் புலம்பல்கள் அப்பப்பா !

மாதத்தில் மூன்று நாட்கள் வாழ்வில்
பெரும்பகுதி உங்களுக்கு போராட்டம்

நீங்கள் பெண் தெய்வங்கள் கோயிலில்
சிலையாக இருக்கும்போது 
வெளியே பெண்ணாக அதுவும் அழகாக 
இருந்துவிட்டால் விலை 
நிர்ணயிக்கப்படும்  பொம்மைகள்
நீங்கள் மெழுகுவர்த்திகள் 
குடும்பத்தின் ஒளிவிளக்கு
நீங்கள் சுமைதாங்கிகள் 
கட்டிட பணியில் செங்கலை 
காலை முதல் மாலை வரையில் 
தலையில் சுமப்பீர்கள்

தாயாக குழந்தையை சுமப்பீர்கள்
கணவன் இல்லை என்றாலும், குடும்பத்தை 
கவனிக்காத குடிகார,சூதாடி வாய்த்த்தாலும் 
குடும்ப பாரத்தை சுமப்பவர்கள்

இடி தாங்கிகள்
வீட்டிலும் வெளியிலும் ஏச்சுக்களையும்,
கேட்க முடியாத பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டு
மனதை கல்லாக்கி கொண்டு சிரிக்கும் மேகங்கள்

எல்லாவற்றையும் சுமப்பதால் 
உங்களுக்கு சுமங்கலிகள் என்று 
பெயர்  சூட்டினரோ?
குங்குமம் நெற்றியில் இருந்தால் சுமங்கலி
குங்குமம்  அழிந்தால் உங்கள் பெயர் அமங்கலி
எங்கும் பாதுகாப்பில்லை எவ்வயதிலும் 
பாதுகாப்பில்லை உனக்கு 
ஆனால் ஆண்களால் மட்டுமல்ல 
ஆணாதிக்க புத்தி கொண்டு
பெண் வடிவம் தாங்கிய 
பெண்களாலும் தான் 

நீ நினைத்த ஆணை மணக்க
உனக்கு அனுமதியில்லை
நகை மீது மோகம் கொண்டால்
உன் உயிருக்கு 
உத்தரவாதமில்லை

ஆனால் நீ அணியும் தங்க நகைகளுக்கு 
ஹால் மார்க் உத்தரவாதம்  கேட்கிறாய்
என்னே விந்தை!

பெண் பாலாக இருப்பதால் பாலியல் 
கொடுமைக்கு ஆளாகிராய், ஆளாக்கப்டுகிறாய் 
இதற்க்கு காரணம் ஆண்கள் மட்டுமல்ல
உங்களில் பாதியான பாதிக்கப்பட்ட
ஆண்களும்பெண்களும்தான். 

பெண்களே நதிகளுக்கு 
உங்கள் பெயரை சூட்டினர்
அதனால்தான் நதிகளில்
சாக்கடைகள் இன்று கலந்து
 நதிகளுக்கும் சாக்கடைகளுக்கும் 
வேறுபாடு தெரியாமல் போய்விட்டது. 


சாக்கடைகளை யார்
சுத்தம் செய்வது?

ஒழுக்கமாக இருங்கள்
மனம் இறுக்கமாக இருக்காதீர்கள்
உணர்வுகளை கட்டுபடுத்துங்கள்.

எதிர்கால உலகம் உங்கள் 
குழந்தைகளை நீங்கள் ஒழுக்கமாக 
வளர்ப்பதில்தான் உங்கள்
எதிர்காலம் உள்ளது 
என்பதை மறந்துவிடாதீர்கள்  


No comments:

Post a Comment