Sunday, November 13, 2011

மதங்களும் அதன் கோட்பாடுகளும்

எல்லா மதங்களும் இறைவனை அடையும் வழியை காட்டுகின்றன
உலகிலே உள்ள வெவ்வேறு பகுதிகளில் வாழும் வாழ்க்கை நடைமுறைக்கேற்ப
மதங்களும் அதன் கோட்பாடுகளும் வரையறுக்கபட்டுள்ளன
இஸ்லாம் இறைவனே அனைத்திற்கும் மேலானவன் என்றும் அவனை எதனுடனும் ஒப்பிடக்கூடாது என்றும் அனைவரும் சகோதரர்கள் என்றும் கூறுகிறது
கிருத்துவ மதமோ இறைவனை நம்புங்கள் பாவம் செய்யாதீர்கள்,தனக்கு தீமை செய்பவனையும் மன்னியுங்கள் ,தன்னைப்போலவே பிறரையும் நேசியுங்கள் என்று சொல்கிறது
புத்த மதம் புலனடக்கம் தேவை,துன்பங்கள் நீங்க ஆசைகளை விட்டொழிக்கவேண்டும்,பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமலிருக்க வேண்டும் என்று சொல்கிறது
இந்துமதம் அன்பே இறைவன் அனைத்தும் இறைவனால் உண்டாக்கப்பட்டது,அனைத்து உயிர்களிளிலும் இறைவன் வசிக்கின்றான் உயிர்களுக்கு தொண்டு செய்து வாழுங்கள்.இறைவனிடம் பக்தி செய்யுங்கள் பலன் கருதாது உழையுங்கள்
இவ்வாறு மதங்களின் நோக்கம் பிற உயிர்களிடம் அன்பு காட்டி ,நன்மைகளே செய்து,இறைவனிடம் பக்தி செய்து மீண்டும் இறைவனிடமே சென்று அயிக்கியமாவதுதான்.
ஆனால் இன்று உலகில் நடப்பது என்ன/
அனைத்தும் நேர்மாறாக நடக்கின்றன
அரசுகள் மதத்திலுள்ள நல்ல நெறிகளை கடைபிடிக்காமல் தங்கள் மதங்களை பரப்புவதில் தர்மத்திற்கு புறம்பான வழிகளில் மக்களை துன்புறுத்தி கொடுமைபடுதிவருகின்றன
எவரும் மதம் போதிக்கும் தத்துவங்களை நடைமுறையில் அனுசரிப்பதில்லை
அதனால்தான் அகந்தை கொண்டு அன்பில்லாமல் ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு ஈசல் பூச்சிகள் போல் கொத்து கொத்தாக மடிகின்றனர்
இந்நிலைமை மாறி இவ்வுலகில் மானிடர்கள் பிறருக்கு தீங்கு செய்யாமல் அன்புடன் வாழ
இறைவன்தான் நல்ல புத்தியை வழங்கவேண்டும்

2 comments:

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி திரு ரத்தினவேல் அவர்களே.
    உங்கள் கருத்துக்கள் இரத்தின சுருக்கமாக உள்ளது

    ReplyDelete