Wednesday, February 15, 2012

மனிதனே உன் உயிரின் விலை என்ன?

மனிதனே உன் உயிரின் விலை என்ன? 

விபத்தில் மாண்டால் 
சாலை விபத்தில் மாண்டால் சில ஆயிரம்
ரயில் விபத்தில்  மாண்டால் சில லட்சம்
விமான விபத்தில் மாண்டால் பல லட்சம்

யாருக்கும் தெரியாமல் மாண்டால் ஒன்றும் இல்லை
வீட்டிலே மாண்டால் காப்பீடு செய்திருந்தால் ஏதாவது கிடைக்கும்

உயிரின் விலை இறக்கும் இடத்தை பொருத்து நிர்ணயிக்கபடுகிறது

சில நேரங்களில் தற்கொலைகளும் தியாகமாக கருதப்பட்டு
அந்த உயிருக்கு பல லட்சங்கள் நிர்ணயிக்கபடுகின்றன

சில நேரங்களில் ஊடகங்களும் நீதிமன்றங்களும் விலையை ஏற்றிவிடுகின்றன

நாட்டிற்காக உயிர் துறந்தால் தியாகம்
நாட்டிற்காக கொலை செய்தால் அது வீரம் 

அந்த கொலையை அரசு இயந்திரம் செய்தால் அது சட்டம்
ஒழுங்கு நிலை நாட்டுதல்

அதுவே தனி மனிதன் செய்தால் அது கொலை அவனுக்கு பரிசு தூக்கு தண்டனை

அதுவே தீவிரவாதிகள் செய்தால் அவர்கள் அரசாங்க விருந்தாளிகள் சாகும்வரை 

உயிருக்கு விலை நிர்ணயிக்கமுடியாது 
உயிரை கொடுப்பவன் இறைவன் 
அதேபோல் உயிரை எடுப்பவனும் அவனே

மனிதர்கள் அவர்கள் போக்கிற்கு இந்த உண்மையை உணராமல்
பிதற்றி திரிகின்றனர் என்பதுதான் வேதனை 
  

No comments:

Post a Comment