Saturday, January 5, 2013

வாய் சொல்லில் வீரன் தமிழன்


வாய் சொல்லில் வீரன் தமிழன்

வாய்  சொல்லில் வீரன் தமிழன்
எப்படி?

அவனால் எந்த பிரச்சினையை தீர்க்க முடிந்தது?
ஈழ தமிழர் பிரச்சனையா?
காவிரி நீர் பிரச்சினையா?
பாலார் வறண்டு பாலைவனமாய் போன பிரச்சினையா?
இல்லை தற்போது இரு மாநிலங்களை ஆட்டி வைக்கும்
முல்லை பெரியார் பிரச்சினையா?
தமிழக மீனவர் பிரச்சினையா/
இன்னும் இது போன்ற பல பிரச்சினைகள் மிக சுலபமாக
தீர்ந்துவிடும்


ஆனால் உண்மையான பிரச்சினையே சுயநலம் பிடித்த
அரசியல் கட்சிகளும் தமிழ் நாட்டின் மீதோ,அல்லது  மக்களின் மீதோ
சிறிதும் அக்கறையில்லாமல் ஆனால் அக்கறையிருப்பதுபோல் காட்டிக்கொண்டு வெற்று அறிக்கைகளையும் வெட்டி போராட்டங்களையும்
நடத்திக்கொண்டு மக்களை ஏமாற்றிகொண்டிருக்கும் ஒரு கூட்டம்தான்


இரண்டாவது எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படும் தமிழன்
வேகம் வந்த நேரத்திலேயே வெத்து வேட்டாகிவிடும் அவன் உணர்வு


இவர்கள் எந்த காலத்திலும் எந்த பிரச்சினைக்கும் ஒன்று சேரமாட்டார்கள்.

இவர்களால்தான் ஒன்றுமறியாத அப்பாவி தமிழ்மக்கள்
ஏமாற்றபடுகிறார்கள்

உழைக்கும் தமிழர்கள் நன்றாக உழைத்து தமிழ் நாட்டை வளம் கொழிக்க
வைக்கிறார்கள்

ஆனால் அவர்களை சுரண்டி பிழைக்கும் சிறிய அளவிலான கூட்டம்
அவர்களை அவர்களின் உழைப்பின் பயனை அனுபவிக்க முடியாத
நிலையில் வைத்துள்ளது மிக கொடுமை

ஒரு சில தலைவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் மோசடி
செய்துகொண்டிருக்கின்றனர்

கேட்டால் சொல்வார்கள்.நாங்கள் கல்வியை இலவசமாகினோம்
வாழ அனைத்து உதவிகளையும் இலவசமாக அரசு சார்பில் அளிக்கிறோம்
மக்கள் முன்னேறிவிட்டார்கள் என்று

மக்களை போதைக்கு அடிமையாகி அவர்களின் உழைப்பினால் கிடைத்த
பணத்தை உறிஞ்சி அவர்களுக்குக்கு இலவசங்களை அளிப்பதால் என்ன  பயன்?

அரசுக்கு பெருகிவரும்,குற்றசெயல்கள்,மருத்துவம்,,சுகாதார கேடு,
சமூகத்தில் குடும்ப அமைப்புகள் சீர்கேடு ஆகியவற்றால் செலவுகள்
தேவையற்ற ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை

அந்த பணத்தை ஆக்க பூர்வமான வகையில் செலவு செய்ய
வாய்ப்பில்லாமல் போகின்றதை யாரும் மறுக்க முடியாது


உண்மையில் நம் யார் கையையும் ஏந்த அவசியமில்லை
ஒவ்வொரு ஆண்டும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது
மொத்த தண்ணீரும் கடலில் வீழ்ந்து வீணாகிபோகிறது
இந்த வீணாகி போன மனிதர்கள் ஆளும் அரசுகளாலே

.
தண்ணீரை சேமிக்க புதிய நீர்தேக்கங்களோ ,
தடுப்பு அணைகளோ எந்த அரசுகளும்
கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை

நிலத்தடி நீர் தேங்க விடாமல் ஆற்று மணலை
சுரண்டி விற்று கொள்ளை லாபம் பார்த்ததுதான் 
இவர்கள் தமிழர்களுக்கு ஆற்றிய உதவி

இருக்கின்ற அனைத்து நீர் நிலைகளையும் அழித்தது மட்டுமல்லாமல்
வருடா வருடம் வெள்ளம், வறட்சி போன்ற நிகழ்வுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை உதவியாக அளித்துவிட்டு அத்தோடு தங்கள் கடமைகளை
முடித்துகொண்டதுதான் இவர்கள் நம்மை ஆண்ட பலன்
.

நம்மை சுற்றி இருக்கின்ற அனைத்து மாநிலங்களும்
கணக்கற்ற அணைகளை கட்டி தண்ணீரை சேமித்து கொண்டனர்
அதையும் மீறி ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து
வீணாகி கொண்டிருக்கிறது அதை தடுக்க உருப்படியான  நடவடிக்கை
எடுக்க யாரும் தயாரில்லை

.
பிரச்சினை வரும்போது அறிக்கை விடும் கட்சிகள் பிரச்சினை தற்காலிகமாக அடங்கியவுடன் வேறொரு பிரச்சினையை கையிலெடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலேயே இந்த ஐம்பது ஆண்டுகளாக காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றன

மின்சாரம் தமிழ் நாட்டில் கிடைத்தும் ,அதை முறையாக பயன்படுத்தாமல்,நிர்வாக சீர்கேடு ,மின்சக்தி கொண்டு செல்வதில் இழப்பு,இலவச மின்சாரம் ,ஊழல் நிர்வாகம் போன்றவற்றால் தமிழ் நாட்டு மக்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்
.

தமிழ் நாட்டு மக்கள்,சினிமா,சாராயம்,போதை,ஊழல் அரசியல்வாதிகளின் கவர்ச்சி இலவசங்கள் இவற்றில் மயங்கி எதிர்காலம் கேள்விக்குறியாய்
காலத்தை தள்ளுகின்றனர்


மற்ற மாநிலத்தவர்கள் இங்கு தங்கள் புத்தியை பயன்படுத்தி
ராஜபோக வாழ்க்கை வாழுகின்றனர்

தமிழன் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு எதையும் சிந்திக்காமல்
வன்முறையில் இறங்கி தன் வாழ்க்கையை மட்டுமல்லாது தன்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறான்
.

இருப்பவர்களுக்கு ஒன்றும் காணோம்
இன்னும் எத்தனை காலத்திற்கு   பழம் பெருமை கொண்டிருப்பது?

லட்சகணக்கான தமிழர்கள் தங்க இடமில்லாமல் நடைபாதை ஓரம் கிடக்கிறார்கள்
அவர்களுக்கென்று ஒவ்வொரு நகரத்திலும் இரவு தங்க ஒரு இடம்
அமைத்து கொடுக்க எந்த அரசாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?

விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் நன்றாக நடைபெற தடையற்ற மின்சாரம்,கட்டமைப்பு வசதிகள் எந்த அரசாவது செய்ததுண்டா?
ஒளிவு மறைவற்ற ஊழலற்ற நிர்வாகம் நடைபெற .அரசியல்,இடை தரகர்கள் தலையீடு இல்லாத நிர்வாகத்தை தர எந்த அரசாவது முய்ற்சிததுண்டா?

ஏழை,நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசியை கட்டுபடுத்த நிலையான
நடவடிக்கை எந்த அரசாவது எடுத்ததுண்டா?


கட்சிகள் ஒன்றுகொன்று வசை பாடுவதும்,ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போடுவதும்,எல்லாவற்றிற்கும் விளம்பரம் தேடுவதுமாக இருந்தால் தமிழ்நாடு எப்போதுதான் உருப்படும்?
தமிழன் எப்போது எல்லா வளங்களும் பெற்று வாழ்வான் ?

சிந்திக்கவே இந்த பதிவு

யாரையும் குற்றம் சாட்ட அல்ல
courtesy Pic-google.

2 comments:

  1. சிந்தனையைத் தூண்டும் பதிவு அய்யா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
      சிந்தனையை தூண்டும் பதிவுகளை
      தரும் கரந்தையார் அவர்களே

      Delete