Saturday, November 19, 2011

வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டு

இன்றைய உலகில்
பணக்காரனும் மகிழ்ச்சியாக இல்லை
ஏழையும் மகிழ்ச்சியாக இல்லை
ஆனால் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால்
இந்த நிலை இல்லை
மக்கள் அவரவருக்கு கிடைத்த வாழ்க்கையை
இறைவன் அளித்த பரிசாக கொண்டு
மன நிம்மதியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்
இக்காலத்தில் மக்கள் பிறரை போல்
வாழ வேண்டும் என்று பேராசைப்பட்டு
குறுக்கு வழிகளில் தகுதிக்கு மீறி
செயல்களை செய்து அதன் விளைவுகளால்
வாழ் நாள் முழுவதும் நிம்மதியின்றி வாழ்கின்றனர்
செல்வந்தனாக வேண்டுமென்று உழைத்து
உழைத்து வாழ்நாளில் பாதியை எந்த
இன்பங்களையும் அனுபவிக்காமல்
வீணடிக்கின்றனர்.செல்வந்தனாகும்போது
உடல்நலம்,மனநலம் கெட்டு
துன்பத்தில் மீதி வாழ்க்கையை கழித்து
மனநிம்மதிஇன்றி மடிகின்றனர்.
இதை விடுத்து வாழ்க்கையை அதன் போக்கில்
எதிர்கொண்டு திருப்தியாக மகிழ்ச்சியாக
வாழ பழகிக்கொள்ள வேண்டும்

1 comment:

  1. வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
    இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.
    அருமையான கருத்துக்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே! தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"


    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete