Friday, August 3, 2012

பாருக்குள்ளே நல்ல நாடு -

பாருக்குள்ளே நல்ல நாடு -பாரத நாடு அன்று

இன்று ?

லஞ்ச தேசம் -இந்தியா   

லஞ்ச நாடு- இந்தியாவின் அனைத்து நாடுகளும் (மாநிலங்களும் )

நீதிபதிகளே லஞ்சம் வாங்கி
சிறைக்கு சென்ற பெருமை பெற்ற மாநிலம் -ஆந்திரம் மற்றும் கர்நாடகா

ஒழுக்கம் தவறிய மாநில ஆளுநர்கள் உள்ள நாடு -இந்தியா

அரசு பணத்தை கொள்ளைஅடித்து வெட்கமின்றி
உலா வரும் அமைச்சர்கள் நிறைந்த நாடு-இந்தியா

அரசியலில் பிழை செய்தோருக்கு அறம்  கூற்றாகும் அன்று 


இன்று ?

அடுத்த தேர்தலில் அமைச்சராவார் போட்டியில் வென்று 

நீதிக்கு பதியாய் விளங்கினார்கள் அன்று 

நிதிக்கு பதியாய் விளங்குகிறார்கள் இன்று 

குடிமக்களுக்காக ஆட்சி நடந்தது அன்று 

மக்களை குடிக்க வைத்து அழிப்பதற்காக ஆட்சி நடக்கிறது இன்று
  

1 comment:

  1. ஒவ்வொரு வரியும் சாட்டையடி...
    அனைத்தும் உண்மை...
    எங்கே நம் நாடு வல்லரசு ஆவது...?
    நல்லரசு ஆனால் சரி... ...ம்...

    ReplyDelete