Tuesday, August 14, 2012

ஏற்ப்பது இகழ்ச்சி என்றால் அவ்வை மூதாட்டி

ஏற்ப்பது இகழ்ச்சி என்றால் அவ்வை மூதாட்டி 

ஆனால் இன்று தமிழ் நாட்டு மக்கள் ஏற்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி என்று ஆனந்த கூத்தாடுகிறார்கள்

ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு பிறகு பதவிக்கு வரும் அரசுகள் புதிதாக ஏதாவது இலவசமாக அறிவிப்பார்கள என்று ஏங்கி தவிக்கிறார்கள் 

தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவிக்கும் இலவசங்களை பொறுத்துதான் அடுத்த ஆட்சி அமையும். 

தமிழ் நாட்டில் தொடங்கிய இந்த எய்ட்ஸ் நோய் அனைத்து மாநிலங்களுக்கும் பரவி இன்று மைய்ய அரசையும் தொற்றிக்கொண்டு விட்டது.

அடித்தட்டு மக்களை என்றும் பிச்சைக்காரர்களாகவே வைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றுவிட்டன 

மக்களுக்கு தங்கள் வறுமை பற்றியோ தாங்கள் சிறுமை படுத்தப்படுவதை பற்றியோ கவலையில்லை.எப்போதும் ஏதாவது ஓசியில் கிடைத்தால் போதும்.போதாக்குறைக்கு இந்த பணியை தற்போது அனைத்து வியாபாரிகளும்  கடை பிடிக்க தொடங்கி விட்டார்கள். ஆடி தள்ளுபடி ,அசத்தல்அள்ளுபிடி ,என்று வருடம் முழுவதும் மக்களை ஏமாற்றி கொழுத்து வருகிறார்கள் 

கல்வி கற்பதற்கு மட்டும் பிச்சை எடுக்கலாம் என்பது தமிழ் பழமொழி

அனைத்தும் இலவசமாக கிடைக்கும்போது கல்வி எதற்கு கற்க வேண்டும். ஏதாவது வேலைக்கு சென்றால் காசு கிடைக்கும் என்ற போக்கு தமிழ் நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் உருவாகும் போக்கு அதிகரித்துவருகிறது  

1 comment:

  1. ...ம்... இன்னும் என்னென்ன இலவசம் என்று வரப்போகுதோ...

    ReplyDelete